ADDED : ஏப் 09, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு நாய்களால் அச்சம்
ரிஷிவந்தியத்தில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி திரிவதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
-திருமால், ரிஷிவந்தியம்.
வாகன ஓட்டிகள் அவதி
வீரசோழபுரம், மாடூர் பகுதியில் சர்வீஸ் சாலைகளில் பயிர்களை காய வைக்கும் உலர்களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
-சரவணன், கள்ளக்குறிச்சி.
ஆற்றில் கழிவு நீர் கலப்பு
கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், கச்சிராயபாளையம்.

