sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது

/

பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது

பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது

பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது


ADDED : செப் 29, 2025 12:18 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒளிராத விளக்கு

நல்லாத்துப்பாளையத்தில் மின் கோபுர விளக்கு பழுதாகி விட்டது. இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு வெளிச்சம் இல்லாத காரணத்தால், மக்கள் சிரமப்படுகின்றனர்.

- உதயகுமார், நெருப்பெரிச்சல்.

பெத்திச்செட்டிபுரம், 3வது வீதியில் கடந்த, இரண்டு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை.

- வேலுசாமி, பெத்திசெட்டிபுரம்.

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ரோட்டில் தெருவிளக்கு எரிவதில்லை. இரவில், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

- செல்வராஜ், மீனாம்பாறை

சுகாதார சீர்கேடு

திருநீலகண்டபுரத்தில் குடிநீர் திறக்கப்படும் இடத்தில் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளது. நோய் பரவும் அபாயம் இருப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வராஜ், திருநீலகண்டபுரம்.

பேனரால் இடையூறு

சோளிபாளையம், பாரதி நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் மரத்தடி நிழலில் நின்று வருகின்றனர். அந்த மரத்தையும் மறைத்து விளம்பர பேனரை வைத்துள்ளனர்.

- கவிராஜன், சோளிபாளையம்.

குப்பைகள் குவிந்தன

திருமுருகன்பூண்டி, துரைசாமி நகரில் செம்மொழி பூங்கா நுழைவாயில் முன், பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது.

- கோவிந்தராஜன், திருமுருகன்பூண்டி.

கழிவுநீர் பாய்கிறது

பூலுவபட்டி - பூண்டி ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் சென்று வருகிறது. பாதசாரிகள் ரோட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

- தேவராஜ், பாலாஜி அவென்யூ.

மரங்கள் சாய்ப்பு

ராயபுரம், விநாயகபுரம் இரண்டாவது வீதியில், நன்கு வளர்ந்து இருந்த, நான்கு மரங்களை சிலர் வெட்டி சாய்த்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- காமராஜ், திருப்பூர்.

வாகன இடையூறு

எஸ்.ஆர். நகர் தெற்கு குடியிருப்பில் மக்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது.

- சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர். நகர் தெற்கு.

குடிநீர் வீண்

அங்கேரிபாளையம் ரோடு டீச்சர்ஸ் காலனி 3 வது வீதியில் குடிநீர் வீணாகி ரோட்டில் சென்று குளமாக தேங்கி நின்று வருகிறது.

- வாசன், டீச்சர்ஸ் காலனி.

சாயும் அபாயம்

பொங்குபாளையம், கிருஷ்ணா நகரில் மரம் பட்டு போய், விழும் நிலையில் உள்ளது. கீழே விழும் முன், அதிகாரிகள் பார்வையிட்டு அகற்ற வேண்டும்.

- நாகராஜ், பொங்குபாளையம்.

குழாய் உடைப்பு

சந்திராபுரம் பாரதி நகரில் குழாய் உடைப்பு சரி செய்யாமல், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

- கோகுல்ராஜ், சந்திராபுரம்.

ரியாக்ஷன்

குப்பை அகற்றம்

திருப்பூர் 58வது வார்டு பூங்கா நகரில் குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்து, குப்பை தொட்டி வைக்கப்பட்டது.

- மகேஷ்குமார், பூங்கா நகர்.






      Dinamalar
      Follow us