நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருள் சூழ்ந்த பாலம் விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில், வாணியம்பாளையம் அருகேவுள்ள பாலத்தின் கீழே இருள் சூழ்ந்துள்ளதால் குடிபிரியர்கள் மது அருந்தி அவ்வழியே செல்லும் மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.
- சிங்காரம், பஞ்சமாதேவி. பன்றிகள் தொல்லை விழுப்புரம், தேவநாதசுவாமி நகர் விரிவாக்கத்தில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- சந்தீப், விழுப்புரம். மாடுகளால் அச்சம் விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பரபரப்பான நேரங்களில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- உமையாள், விழுப்புரம். வாகன ஒட்டிகள் அவதி அய்யூர் அகரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை பயணிக்க முடியாத நிலையில் உள்ளதால் வாகனங்களை ஓட்டி செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர்.
- சிலம்பரசன், அய்யூர் அகரம்.