நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமூக விரோதிகளின் கூடாரம் விழுப்புரம், மகாராஜபுரம் அரசு ஊழியர்களின் குடியிருப்பு பாழடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
- வைதேகி, விழுப்புரம். நாய் தொல்லையால் அச்சம் குச்சிப்பாளையம் கிராமத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.
- சிலம்பரசன், குச்சிப்பாளையம். போதை ஆசாமிகள் அட்டூழியம் பொய்யப்பாக்கம் கிராமத்தில் அரச மரத்தடியில் போதை ஆசாமிகள் பலர் பகலில் சூதாட்டம் விளையாடுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பாண்டுரங்கன், பொய்யப்பாக்கம். குறைந்த மின்னழுத்த பிரச்னை விழுப்புரம், தேவநாத சுவாமி நகர், குடியிருப்புகளில் மின்னழுத்த பிரச்னை நீடிப்பதால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன.
- வினோதன், விழுப்புரம்.