நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீரால் துர்நாற்றம்
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு சண்முகாபுரம் காலனியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.
- சரஸ்வதி, விழுப்புரம்.
நாய்களால் அச்சம்
கோலியனுாரில் குடியிருப்பு பகுதிகளில் வெறிநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் அவ்வழியே மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
- சங்கர், கோலியனுார்.
பார்க்கிங் வாகனங்களால் 'டிராபிக்'
காணை - திருக்கோவிலுார் சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்களை பலர் பார்க்கிங் செய்வதால், பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது.
- ரகோத்தமன், காணை.