PUBLISHED ON : ஏப் 14, 2026 12:02 AM

அ நிறம் | அளவு
பாலைவனமாக மாறிய ஏரி
கஜகஸ்தான் வடக்கே, உஸ்பெகிஸ்தான் தெற்கே அமைந்துள்ளது ஏரல் கடல். இது அளவில் சிறியதாக இருப்பதால் ஏரி என அழைக்கப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய உப்புநீர் ஏரியாக திகழ்ந்தது. பரப்பளவு 68 ஆயிரம் சதுர கி.மீ. ஆனால் 1960களில் இந்த ஏரிக்கு செல்லும் முக்கிய நீராதாரமான ஆறுகளை சோவியத் யூனியன் தன் பாசன வசதிக்கு திருப்பியது. இதன் காரணமாக நீர்வரத்து குறைந்து 2007ல் பரப்பளவு வெறும் 10 சதவீதமாக குறைந்தது. நான்கு ஏரியாகவும் பிரிந்தது. பின் இதில் சில வறண்டு பாலைவனமானது. வடக்கு ஏரல் ஏரியை மட்டும் கஜகஸ்தான் பாதுகாத்து வருகிறது.


