sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 28, 1904

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ராமலிங்க சர்மா - வெங்கட லட்சுமம்மா தம்பதியின் மகனாக, 1904ல் இதே நாளில் பிறந்தவர் உப்பலதடியம் நாகையா சர்மா.

இவர், திருப்பதி தேவஸ்தானம் உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு முடித்து, குமாஸ்தாவாக பணியாற்றினார். சித்துாரில் பத்திரிகையாளராகவும், ராம விலாச சபாவில் நாடக நடிகராகவும் வளர்ந்தார். தெலுங்கு சினிமாக்களில் நடித்து, தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

சீனிவாச அய்யங்கார், சத்தியமூர்த்தியின் விடுதலை போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, கவுஹாத்தி மாநாட்டில் பாடினார். தண்டி யாத்திரையில் பங்கேற்றார். வந்தே மாதரம், சுமங்கலி உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார்.

தமிழில் நடித்த, அசோக்குமார், மீரா, என் வீடு உள்ளிட்ட படங்களால் புகழடைந்தார். 'ரேணுகா பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கியதுடன் இசையமைப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகர் என பல திறமைகளையும் வெளிக்காட்டினார். தன் 69வது வயதில், 1973, டிசம்பர் 30ல் மறைந்தார்.

'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் தென்மாநில நடிகர் பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us