sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

போதை மாத்திரை விற்பனை மாணவர் உட்பட 4 பேர் கைது

/

போதை மாத்திரை விற்பனை மாணவர் உட்பட 4 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை மாணவர் உட்பட 4 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை மாணவர் உட்பட 4 பேர் கைது


PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்., நகர்,

எம்.ஜி.ஆர்., நகர், சூளைப்பள்ளம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற நான்கு பேரிடம் விசாரித்தனர்.

அவர்களது 'டியோ' ஸ்கூட்டரை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

பிடிபட்டோர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த தனியார் இன்டர்நெட் நிறுவன ஊழியர்கள் கவுதம், 22, அஜித்குமார், 23, தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் பி.காம் 2ம் ஆண்டு பயிலும் முத்துசெல்வன், 20, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 'பி' பிரிவு ரவுடிஜெயகுமார், 23, என, தெரியவந்தது.

நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 94 டைடோல் போதை மாத்திரைகள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us