/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'தி.மு.க., அரசை கண்டித்து, வரும் 9ம் தேதி திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது' என, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரின் பல பகுதிகளில், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.
திருப்போரூர் - நெம்மேலி நான்கு வழிச்சாலை கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதற்கு காரணமான தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.