/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கூட்டம்
/
அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கூட்டம்
PUBLISHED ON : மார் 17, 2026 05:47 AM

விருதுநகர்: விருதுநகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கபட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் நடந்து.
இதில் கலெக்டர் சுகபுத்ரா பேசியதாவது:பொது இடங்கள், அரசு அலுவலக வளாகங்களில் சுவர் விளம்பரம் வரைதல், சுவரொட்டிகள், காகிதங்கள் ஒட்டுதல் அல்லது கட் அவுட்கள் கட்டுதல், பேனர்கள், தட்டிகள் வைத்தல் எதையும் செய்யக் கூடாது. பிரசார கூட்டங்கள்,ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள், பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெற கோரும் அரசியல் கட்சிகள், கட்சியின் பிரதிநிதிகள், தங்களது மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidha.eci.gov.in/login/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் தொடர்பாக தெரிவிக்கும் புகார் களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

