/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஒப்பந்தம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் நிர்வாகி கைது
/
ஒப்பந்தம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் நிர்வாகி கைது
ஒப்பந்தம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் நிர்வாகி கைது
ஒப்பந்தம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் நிர்வாகி கைது
PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெங்காடு பகுதியில், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், வெங்காடு ஊராட்சி, 5வது வார்டு உறுப்பினரும், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலருமான முருகன், 36, அதே பகுதி வினோத்குமார், 33, டில்லிபாபு, 33, ரஞ்சித்குமார், 29, ஆகிய நான்கு பேர் நேற்று, கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்த, மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடம் தண்ணி கேன் சப்ளை, டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து தொழிற்சாலை சார்பில், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலர் முருகன், வினோத்குமார், டில்லிபாபு, ரஞ்சித்குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

