PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம், சென்னை, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 38. தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று, தன் 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.
மதுராந்தகம் அடுத்த ஊனமலை அருகே, முன்னே சென்ற லாரி, திடீரென வலது புறம் திரும்பியதால், லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராஜேஷ் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.