PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூச்சுத்திணறலால் குழந்தை சாவு
ஓசூர், டிச. 10-
சூளகிரி அருகே முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி கவிதா, 24. இவர்களுக்கு, இரண்டரை வயதில் பவ்யஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. ஓசூர் முனிதேவி நகரில் வெங்கடேஷ், மனைவி, குழந்தையுடன் தங்கியிருந்தார். உடல்நிலை பாதித்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். கடந்த, 7 மாலை, 6:30 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.