sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மாசாணியம்மன் கோயில் திருவிழா  மயான பூஜையில் பக்தர்கள் பரவசம்

/

மாசாணியம்மன் கோயில் திருவிழா  மயான பூஜையில் பக்தர்கள் பரவசம்

மாசாணியம்மன் கோயில் திருவிழா  மயான பூஜையில் பக்தர்கள் பரவசம்

மாசாணியம்மன் கோயில் திருவிழா  மயான பூஜையில் பக்தர்கள் பரவசம்


PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,:பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் விழாவை முன்னிட்டு மயான பூஜை நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது.

மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடித்தவுடன், தலைமை முறைதாரர் மனோகர், மயான அருளாளி அருண் உள்ளிட்ட அருளாளிகள், அம்மனின் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் கோவிலிலிருந்து, ஆழியாற்றங்கரைக்கு சென்றனர். மயான பூஜைக்காக மண்ணால், மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில், நீராடி தீர்த்தம் எடுத்து வந்தார். நள்ளிரவு, 2:00 மணிக்கு பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருஉருவத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதன்பின், அருளாளி எடுத்து வந்த தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால், அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர். அதிகாலை, 2:50 மணிக்கு அருளாளிக்கு அருள் வந்து, அம்மனின் திருஉருவத்தில் இருந்து எலும்புத்துண்டை எடுத்து வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார்.

மயான பூஜை அதிகாலை, 3:30 மணிக்கு முடிந்தது. பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு உப்பாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் உருவத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு மகா பூஜை நடைபெற்றது.

இன்று காலை, குண்டம் கட்டுதல், மாலையில் சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (14ம்தேதி) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us