/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM
ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம்
முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆத்துார், நவ. 26-
ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று, தாலுகா தலைவர் கலைமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மரவள்ளி கிழங்கு, பாக்கு விலை வீழ்ச்சி காரணமாக, கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மரவள்ளி கிழங்கு விலை தொடர்பாக முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். ஆத்துார் உழவர் சந்தை முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுக்க சென்றபோது, சிலரை மட்டுமே அனுமதிக்க முடியும் என, போலீசார் கூறியதால், போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
ஆத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் அழகுராணி, பேச்சுவார்த்தை நடத்திய பின், விவசாய சங்க நிர்வாகிகள் மனு கொடுக்க அனுமதிப்பதாக கூறினார். அதன்பின், ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியிடம், விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

