/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது
/
ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது
PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM
சென்னை:மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட, ஐந்து காவல் துறை பணியாளர்களுக்கு, 'காந்தியடிகள் காவலர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னகாமணன்; விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய ஏட்டு மகாமார்க்ஸ்; திருச்சி மாவட்டம், துறையூர் மதுவிலக்கு பிரிவு ஏட்டு கார்த்திக்; சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா; சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பூமாலை ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விருது, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, முதல்வரால் வழங்கப்படும். விருதுடன் பரிசுத் தொகையாக, 40,000 ரூபாய் வழங்கப்படும்.

