sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பொது - சிறையில் பிளேடு விழுங்கி கைதி தற்கொலை முயற்சி

/

பொது - சிறையில் பிளேடு விழுங்கி கைதி தற்கொலை முயற்சி

பொது - சிறையில் பிளேடு விழுங்கி கைதி தற்கொலை முயற்சி

பொது - சிறையில் பிளேடு விழுங்கி கைதி தற்கொலை முயற்சி


PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல் :மாதவரம் அடுத்த மாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டின் டேனியல், 24. குட்கா விற்ற வழக்கில், எழும்பூர் போலீசார் இவரை கைது செய்து, சில தினங்களுக்கு முன், புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவர் காதலித்து வந்த பெண்ணின் பெற்றோர், செபாஸ்டின் டேனியலின் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தன் மகளை காதலிப்பதை செபாஸ்டின் டேனியல் கைவிட வேண்டும் என கூறியுள்ளனர்.

இத்தகவல், செபாஸ்டின் டேனியலுக்கு தெரிய வந்ததை அடுத்து, நேற்று முன்தினம், சிறையின் சமையலறைக்கு சென்று, அங்கு கிடந்த பிளேடால் தன் வயிறு, கழுத்து பகுதியில் கிழித்துக்கொண்டார். மேலும், பிளேடை உடைத்து விழுங்கி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சிறை போலீசார், செபாஸ்டின் டேனியலை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us