sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ரூ.10 லட்சம் வழிப்பறி ஏழு பேர் பிடிபட்டனர்

/

ரூ.10 லட்சம் வழிப்பறி ஏழு பேர் பிடிபட்டனர்

ரூ.10 லட்சம் வழிப்பறி ஏழு பேர் பிடிபட்டனர்

ரூ.10 லட்சம் வழிப்பறி ஏழு பேர் பிடிபட்டனர்


PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு, கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதாகர், 43; சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்.

இவர், தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை, 100, 200 ரூபாய் என சில்லரையாக மாற்றுவதற்கு, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 25, ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 48, ஆகியோரை அணுகியுள்ளார்.

இதற்காக, தன் நண்பர்கள் இருவருடன் 'மாருதி ஸ்விப்ட்' வாடகை காரில், 10 லட்சம் ரூபாயுடன் கடந்த 7ம் தேதி அயனம்பாக்கத்திற்கு சென்றார். அப்போது, இரு பைக்குகளில் வந்த கும்பல் காரை மறித்து, கத்தி முனையில் 10 லட்சம் ரூபாயை பறித்து தப்பியது.

திருவேற்காடு போலீசார் விசாரித்தனர். இதில், சில்லரை மாற்றி தருவதாக கூறிய மணிகண்டன், திருநாவுக்கரசு, அவர்களது நண்பர்களான புழல் பார்த்திபன், 23, திருவொற்றியூர் ராமசந்திரன், 33, சாமுவேல், 25, ஜீவானந்தம், 27, மற்றும் செங்குன்றம் சூர்யா, 23, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார், ஏழு பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us