sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

'ஹப்பிள்' தொலைநோக்கிக்கு வயது 35!

/

'ஹப்பிள்' தொலைநோக்கிக்கு வயது 35!

'ஹப்பிள்' தொலைநோக்கிக்கு வயது 35!

'ஹப்பிள்' தொலைநோக்கிக்கு வயது 35!


PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாலான இயந்திரங்கள் காலாவதி ஆகும் வயதில், 'ஹப்பிள்' விண்வெளி தொலைநோக்கி, தொடர்ந்து இயங்கி, நம்மை பிரமிக்க வைக்கிறது. விண்வெளிப் பாதையில் வலம் வரும் இந்தத் தொலைநோக்கியின் 35வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நட்சத்திரக் கூட்டங்கள், ஒளிரும் நெபுலாக்கள், ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் விண்மீன் திரள்களைக் காட்டும் புதிய படங்களை நாசா வெளியிட்டது. கடந்த 1990ல் ஏவப்பட்ட ஹப்பிள், விண்வெளியை அடைந்த பிறகே, அதன் கண்ணாடியில் சிறு குறை இருப்பது தெரிய வந்தது. அந்தக் குறையை விஞ்ஞானிகள் சரிசெய்ய எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தந்தன. அதன் பிறகு, ஹப்பிள், நவீன விண்வெளியியலின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

ஹப்பிளின் 35வது ஆண்டு கொண்டாட்டத்திற்காக, நாசா வெளியிட்ட புதிய படங்கள் இந்தக் கருவியின் துல்லியத்திற்கு சான்று. அவை ஒவ்வொன்றும் விண்வெளியியலின் மைல் கற்கள். நம் பிரபஞ்சத்தின் வயதை உறுதிப்படுத்தியது. 'இருண்மை ஆற்றல்' என்ற ஒன்று இருப்பதை தெரிவித்தது. ஏன், நமது அண்டத்தில்,கடந்த பல லட்சம் ஆண்டுகளில் என்ன நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை வழங்கியது.

பிற்பாடு, அகச் சிவப்புக் கதிர் திறனுடன், நாசா அனுப்பிய, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, மீதுதான் இப்போது எல்லோர் கவனமும் இருக்கிறது. என்றாலும், பல ஒளியியல் மற்றும் புற ஊதா ஆய்வுகளில் ஹப்பிள், அலட்சியப்படுத்த முடியாத கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடியே இருக்கிறது. பொறியாளர்கள், அதன் பழமையான கருவிகளை பூமியிலிருந்தபடியே சரிசெய்து, டிஜிட்டல் யுகத்திற்கு முன்பு வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவியிலிருந்து முடிந்த அளவு தகவல்களை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us