PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூர், அன்னை சத்யா நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் கவுரி சங்கர், 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுரி, 27. கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வழக்கம்போல், நேற்று முன்தினம் நள்ளிரவு, கவுரி சங்கர் குடித்து வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றிய நிலையில், கவுரி சங்கர் மனைவி கவுரியை பீர் பாட்டிலால் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.