/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கடைக்காரரிடம் நுாதன 'ஆட்டை' ஊழியர் சிக்கினார்
/
கடைக்காரரிடம் நுாதன 'ஆட்டை' ஊழியர் சிக்கினார்
PUBLISHED ON : மார் 17, 2024 12:00 AM

கொளத்துார்:கொளத்துாரில் உள்ள வண்ண மீன் கடையில் நுாதன முறையில் 1.75 லட்சம் ரூபாய் மோசடி செய்த கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கொளத்துார் பள்ளிசாலை தெற்கு மாட வீதியில் அருண், 24, என்பவர், வண்ண மீன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் சிவா, 19, என்பவர் வேலை பார்த்து வந்தார்.
அருணின் மொபைல் போனில் உள்ள 'கூகுள் பே' செயலியின் 'பாஸ்வேர்டான' ரகசிய குறியீட்டு எண்ணை நோட்டமிட்ட சிவா, அவரது 'கூகுள் பே' கணக்கில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக 1.75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்து உள்ளார்.
இது குறித்து விசாரித்த ராஜமங்கலம் போலீசார், சிவாவிடம் இருந்து 15,000 ரூபாயை மட்டும் மீட்டு, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

