sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பையில் கோகைன் இருவர் கைது

/

பையில் கோகைன் இருவர் கைது

பையில் கோகைன் இருவர் கைது

பையில் கோகைன் இருவர் கைது


PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நுங்கம்பாக்கம், வானிலை ஆராய்ச்சி மையம் பேருந்து நிறுத்தம் அருகே, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு, சந்தேகிக்கும் வகையில் நின்று இருந்தவரின் கை பையை சோதனை செய்தபோது, கோகைன் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. அவர், சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார், 38, என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், மேற்கு ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜான், 38, என்பவரை ஓசூரில் வைத்து, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டோரிடம் இருந்து, 11 கிராம் கோகைன், 40,000 ரூபாய், இரு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயம்பேடு எஸ்டேட் குட்டை, என்.டி.படேல் சாலையில், போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கு நின்ற நெற்குன்றத்தை சேர்ந்த தனஞ்செழியன், 43, என்பவரிடம் இருந்து, 51 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

தனஞ்செழியன் அளித்த தகவலின்படி, நெற்குன்றத்தை சேர்ந்த பெரியசாமி, 26, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us