
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக ஆஸ்துமா தினம்
ஆஸ்துமா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே மாதத்தின் முதல் செவ்வாய் (மே 6) உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'அனைவருக்கும் இன்ஹேலர் சிகிச்சை வசதியை ஏற்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் ஆண்டுக்கு
26 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். 4.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான மரணம் தடுக்க முடிந்தவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

