PUBLISHED ON : பிப் 15, 2026 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லையோர கிராமம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மாவட்டத்தில் உள்ளது டுர்டுக் கிராமம். இது இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள கடைசி கிராமம். மக்கள்தொகை 3370. காரகோரம் மலைத்தொடர் - இமயமலை இடையே அமைந்துள்ளது. அருகில் ஷியாக் ஆறு ஓடுகிறது. இங்கிருந்து 8 கி.மீ., துாரத்தில் இந்தியா - பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. இந்த கிராமம் 1971க்கு முன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. 1971 போரின் போது, இந்திய ராணுவம் இப்பகுதியை மீட்டது. சியாச்சின் பனிமலைக்கு செல்லும் நுழைவுவாயிலில் ஒன்றாக உள்ளது. 2010 முதல் சுற்றுலாப்பகுதியாகவும் விளங்குகிறது.

