/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம்
/
தகவல் சுரங்கம் : பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம்
PUBLISHED ON : மார் 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம்
பிளாஸ்டிக், மின்னணு என பல்வேறு பொருட்களின் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 30ல் உலக பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்டுக்கு 230 கோடி டன் திட கழிவு மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. இதில் 55 சதவீதம் மட்டுமே முறையாக மேலாண்மை செய்யப்படுகிறது. 2050ல் இது 388 கோடி டன்னாக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. 2040ல் ஆண்டுக்கு உணவு கழிவு 93 கோடி டன் பிளாஸ்டிக் கழிவு 3.7 கோடி டன் கடலில் கலக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.