உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 06, 2026 12:12 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
ஹிரோஷிமா தினம்
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பானின்ஹிரோஷிமா மீது 1945 ஆக.,6ல், அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 60 கிலோ எடைமிக்க 'லிட்டில்பாய்' அணுகுண்டை சுமந்து வந்த 'பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. 4.8 சதுர கி.மீ., சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மூன்று நாட்களுக்குப்பின் ஆக., 9ல் நாகசாகி மீது அடுத்த அணுகுண்டை வீசியது. 1.5 லட்சம் - 2.4 லட்சம் பேர் பலியாகினர்.
