உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
தேசிய கைத்தறி தினம்
சமூக, பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் கைத்தறி உள்ளிட்ட உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி 1905 ஆக. 7ல் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதை நினைவுபடுத்துதல், கைத்தறி பொருட்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக 2015 முதல் ஆக. 7ல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது. கிராமப்புற, சிறிய நகர பகுதிகளின் வாழ்வாதாரத்தில் கைத்தறி முக்கிய பங்கு வகிக்கிறது. நெசவு சார்ந்த தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்.
