உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக அகிம்சை தினம்
காந்தியின் அகிம்சை கொள்கை தான் இன்றைய உலகுக்கு தேவை. அகிம்சை போராட்டங்களால் ஆங்கிலேயர்களை கலங்கடித்தார். கடைசி வரை அறவழி போராட்டத்தில் உறுதியாக இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்டார். வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்த இவர் விவசாயிகளின் வறுமையை பார்த்து அரை ஆடை மனிதராக மாறினார். இது அவரை மகாத்மாவாக உயர்த்தியது. கொல்லாமை, துன்புறுத்தாமையை அடிப்படையாகக் கொண்ட அகிம்சை தத்துவத்தை பின்பற்றிய இவரது பிறந்த தினமான அக்., 2, ஐ.நா., சார்பில் உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
