உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 29, 2026 01:39 AM

அ நிறம் | அளவு
புலிகளை பாதுகாக்க கோரி ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், பூடான், நேபாளம் உட்பட 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்து காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்த புலிகள் உதவுகிறது. காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது.
புலிகள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. கடந்த 150 ஆண்டுகளில் 95 சதவீத புலிகள் அழிந்து விட்டன. தற்போது உலகில் 5500 புலிகள் வாழ்கின்றன. இதில் இந்தியாவில் 3700 உள்ளன.
