உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 26, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
வீட்டு வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு முக்கிய இடம் உண்டு. தன்னை வளர்ப்பவருக்கு விசுவாசமாக இருக்கும். இது ஐந்தறிவு உயிரினம் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும். வீட்டுக்கு காவலாக இருக்கும் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஆக.26ல் உலக நாய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற பலவகை நாட்டு நாய்கள் உள்ளன. தற்போது வெளிநாட்டு வகை நாய்களும் வளர்க்கப்படுகிறது. நாய் வளர்ப்பவர்கள் அவற்றை முறையாக பராமரிப்பது அவசியம்.
