உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ம.பி.,யின் சிங்ரவுலி மாவட்டத்திலுள்ள விந்யாச்சல் அனல் மின் நிலையம், இந்தியாவின் பெரிய மின் உற்பத்தி மையம் என அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப்பணி 1982ல் தொடங்கி, 1987ல் மின் உற்பத்தி தொடங்கியது. உலகளவில் 10வது இடத்தில் உள்ளது. இங்கு 4783 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலக்கரி மூலம் இங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய அனல்மின் நிலையம் இதை நடத்துகிறது. இதில் உற்பத்தியாகும் மின்சாரம் ம.பி., குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர், டாமன் டையூ, தாதர் நகர் ஹவேலிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
