உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2026 09:06 AM

அ நிறம் | அளவு
பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜே.பி.சி.,) என்பது ஆளும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களை கொண்டது. இது மசோதா, ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளின் மீது விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் ராஜ்யசபா எம்.பி.,யை விட இரு மடங்கில் லோக்சபா எம்.பி.,க்கள் இருப்பர்.
எண்ணிக்கை நிலையானது இல்லை. இக்குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை பார்லிமென்டில் சமர்பிக்கப்படும். ஆனால் இதை ஏற்பதா, இல்லையா என்பது அரசின் முடிவு பொறுத்தது. முதல் ஜே.பி.சி., 1987ல் 'போபர்ஸ்' முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்டது.
