sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. தென் கொரிய விஞ்ஞானிகள் கண்ணாடி போன்ற புற ஊதாக் கதிர் உணர்வான்களை உருவாக்கியுள்ளனர். இதை ஆடை, அணி கருவிகளுடன் ஒட்டிக்கொள்ள முடியும். வெயில் அபாய அளவை எட்டும் முன், இந்த உணர்வான் ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கை அனுப்பும். இதன் வாயிலாக சருமத்திற்கு கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Image 1488336


2. மியான்மரில், ஒரு கட்டட வடிவமைப்புக் குழுமம் வடிவமைத்த 26 மூங்கில் வீடுகள் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போதும் உறுதியாக நின்றன. வளைந்துகொடுக்கும் தன்மை உடைய மூங்கிலை வைத்து வீடுகட்ட, டிஜிட்டல் வடிவமைப்பு முறையை இந்நிறுவன வல்லுநர்கள் பயன்படுத்தினர்.

Image 1488338


3. அமேசானின் இணைய சேவை கள் மின்கோளாறால் நின்றது. இதையடுத்து, ஒரு சிறிய அணுமின் நிலையத்தை உருவாக்க உள்ளது. எக்ஸ் எனர்ஜி நிறுவனம், எக்ஸ்.இ.,- 100 என்ற சிறிய அணு உலைகளை தயாரித்து உள்ளது. அதில் 12 மினி உலைகளை வாங்கி சுமார் 1 ஜிகாவாட் மின்சாரத்தை தயாரித்து பயன்படுத்த, அமேசான் திட்டமிட்டுள்ளது.

Image 1488339


4. எறும்புகளுக்கு எப்படி துல்லியமான வாசனை உணர்வு வந்தது என்ற ரகசியத்தை ராக் பெல்லர் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு வாசனை நரம்பணுவும், நுாற்றுக்கணக்கான வாசனை அறியும் மரபணுக்களில் ஒன்றை மட்டுமே வெளிப்படுத்துமாறு சுயகட்டுப்பாட்டை விதித்துக்கொள்கிறது. இதற்காக, அருகிலுள்ள மற்ற மரபணுக்களைச் செயலிழக்கவும் செய்துவிடுகிறது. எனவேதான், எறும்புகளால் குழப்பமடையாமல் பலவித வாசனைகளை பிரித்து உணர முடிகிறது.






      Dinamalar
      Follow us