
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
ஒற்றைச் செம்பருத்தி பூ - 2
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
பனை வெல்லம், ஏலக்காய் பொடி - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில், சிறிதளவு நீருடன் செம்பருத்தி பூ இதழ்களைப் பிரித்துப் போட்டு கொதிக்க விடவும். அதில் எலுமிச்சை சாறு, பனை வெல்லம் சேர்க்கவும். பின், சிறிதளவு ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.
இதை வடிகட்டினால், 'செம்பருத்தி தேநீர்!' தயார். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்; சிறுவர் சிறுமியர் விரும்பி பருகுவர்.
- இல.வள்ளிமயில், மதுரை.
தொடர்புக்கு: 97897 88989

