sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

நெகிழ்வு!

/

நெகிழ்வு!

நெகிழ்வு!

நெகிழ்வு!


PUBLISHED ON : ஜூன் 04, 2022

Google News

PUBLISHED ON : ஜூன் 04, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், டி.எஸ்., சாரதா வித்யாலயம் பள்ளியில், 1973ல், 1ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். என் மாமா மகன் கேசவ நாராயணனும் அதே வகுப்பில் படித்தான்.

இனிய பாடல்கள் பாடி, பாடங்களை தெளிவாக விளக்குவார், வகுப்பு ஆசிரியை பாமா. அவருக்கு குழந்தையில்லை. அதனால், எங்களை பார்த்ததும், மகிழ்ச்சியில் பூரித்து அன்பை பொழிவார்.

அன்று பாடம் நடத்திய போது, என் மாமா மகனுக்கு துாக்கம் வந்து விட்டது. அதை கவனித்தவர், அன்புடன் மடியில் கிடத்தியபடி பாடம் நடத்தினார். இது, அவருடனான நெருக்கத்தை அதிகரித்தது. தயக்கமின்றி சந்தேகங்களை நிவர்த்தி செய்து, பாடங்களை சிறப்பாக கற்க வழி செய்தது.

இப்போது என் வயது, 53. இன்றும் என் மாமா மகனை கண்டவுடன், 'அப்பவே நீ ஆசிரியை மடியில் படுத்து துாங்கியவனாச்சே...' என விளையாட்டாக சொல்வேன். அந்த அளவு நெகிழ்வாக அந்த நிகழ்வு பதிந்துள்ளது. அன்னை போல், அன்பை பொழிந்த அந்த ஆசிரியை மனதில் நிறைந்துள்ளார்.

- ஆர்.பாலாஜி, கோவை.

தொடர்புக்கு: 80563 56325







      Dinamalar
      Follow us