sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பொற்காலம்!

/

பொற்காலம்!

பொற்காலம்!

பொற்காலம்!


PUBLISHED ON : டிச 02, 2023

Google News

PUBLISHED ON : டிச 02, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி, அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 11ம் வகுப்பு படித்த போது, உரிய நேரத்தில் வகுப்பிற்கு செல்ல வேண்டும். முறைகேடு செய்யும் மாணவர்களை கண்காணிக்க, உடற்கல்வி ஆசிரியர்கள் பரமசிவன், முத்தையா, சங்கர், சிமியோன் நியமிக்கப்பட்டிருந்தனர்.

வகுப்புக்கு தாமதமாக சென்றால் விளையாட்டு மைதானத்தை சுற்றி ஓடி வந்து தண்டனை அனுபவிக்க வேண்டும். முதல் பாடவேளை துவங்கும் போது, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம், கையில் பிரம்புடன் ரோந்து வருவார். ஆசிரியர்கள் கற்பிப்பதை பொறுப்புடன் கண்காணிப்பார்.

சேட்டை செய்யும் மாணவர்களை உரியமுறையில் வழிக்கு கொண்டு வந்து கற்பித்தனர் ஆசிரியர்கள். அடித்து தண்டித்து திருத்துவது மிக சாதாரணமாக நடந்தது. ஒழுங்கீனமாக நடப்பவர்களை, 'கண்ணை மட்டும் விட்டு, தோலை உரித்து நல்வழி படுத்துங்கள்...' என, ஆசிரியரிடம் பரிந்துரைப்பர் பெற்றோர். இப்போது நினைத்தாலும், அந்த நிகழ்வுகள் வியப்பு தருகின்றன.

என் வயது, 69; அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்றேன். பள்ளியில் படித்த நாட்களை பொற்காலமாக கருதுகிறேன். கடும் சிரத்தை எடுத்து கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

- கு.அருணாசலம், தென்காசி.






      Dinamalar
      Follow us