sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மனக்கணக்கு!

/

மனக்கணக்கு!

மனக்கணக்கு!

மனக்கணக்கு!


PUBLISHED ON : டிச 02, 2023

Google News

PUBLISHED ON : டிச 02, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ராம்நகர் சப் அர்பன் பள்ளியில், 1971ல், 11ம் வகுப்பு படித்தபோது தலைமை ஆசிரியராக இருந்தார் ராதாகிருஷ்ணன். மாணவர்கள் நன்றாக படிப்பதுடன், ஒழுக்கத்தை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தி வந்தார். மனதில் அந்த கருத்து ஆழமாக பதிந்தது. அதை பின்பற்றி படித்து முன்னேறினேன். ஒழுங்கு பேணியதற்காக நன்னடத்தை சான்றிதழ்களும் பெற்றேன்.

கணித ஆசிரியை பத்மா, மனதில் பதியும்படி பாடம் சொல்லித் தருவார். கடும் பயிற்சியால் பொதுத் தேர்வில் கணித பாடத்தில், 98 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில், 3ம் இடம் பிடித்தேன். அதை பாராட்டி பிரத்யேக விழா எடுத்து பரிசு வழங்கினர்.

தற்போது, என் வயது, 68; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளி வகுப்பறைகளில் முறையாக பெற்ற பயிற்சியால், கடினமான கணக்குகளையும் அதிவேகமாக மனதுக்குள் போட்டு விடை காணும் திறன் பெற்றுள்ளேன்;

வாய்ப்பாடுகளை துல்லியமாக சொல்ல முடிகிறது. இந்த நுட்பங்களை வரமாக கற்றுத்தந்த ஆசிரியர்களை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.

- டி.சபிதா, சென்னை.மனக்கணக்கு!

கோவை, ராம்நகர் சப் அர்பன் பள்ளியில், 1971ல், 11ம் வகுப்பு படித்தபோது தலைமை ஆசிரியராக இருந்தார் ராதாகிருஷ்ணன். மாணவர்கள் நன்றாக படிப்பதுடன், ஒழுக்கத்தை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தி வந்தார். மனதில் அந்த கருத்து ஆழமாக பதிந்தது. அதை பின்பற்றி படித்து முன்னேறினேன். ஒழுங்கு பேணியதற்காக நன்னடத்தை சான்றிதழ்களும் பெற்றேன்.

கணித ஆசிரியை பத்மா, மனதில் பதியும்படி பாடம் சொல்லித் தருவார். கடும் பயிற்சியால் பொதுத் தேர்வில் கணித பாடத்தில், 98 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில், 3ம் இடம் பிடித்தேன். அதை பாராட்டி பிரத்யேக விழா எடுத்து பரிசு வழங்கினர்.

தற்போது, என் வயது, 68; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளி வகுப்பறைகளில் முறையாக பெற்ற பயிற்சியால், கடினமான கணக்குகளையும் அதிவேகமாக மனதுக்குள் போட்டு விடை காணும் திறன் பெற்றுள்ளேன்;

வாய்ப்பாடுகளை துல்லியமாக சொல்ல முடிகிறது. இந்த நுட்பங்களை வரமாக கற்றுத்தந்த ஆசிரியர்களை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.

- டி.சபிதா, சென்னை.






      Dinamalar
      Follow us