sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நீதிக்கு இலக்கணம்!

நீதிக்கு இலக்கணம்!

நீதிக்கு இலக்கணம்!


PUBLISHED ON : ஜூன் 06, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், சத்திரம் புளியங்குளம் நடுநிலைப் பள்ளியில், 1957ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...

ஏழை குடும்பத்தை சேர்ந்த நான், வகுப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தேன். இதை பொறுக்காத ஒருவன், என் கால்சட்டையின் பின்புறமிருந்த சிறு கிழிசலை பெரிதாக்கி விட்டான்.

மறு நாள், அந்த கிழிசலை சுட்டிக்காட்டி, 'தபால்பெட்டி வருதுடா...' என, கிண்டல் செய்ய, சக மாணவர்கள் சிரித்தனர். மிகவும் அவமானமாக உணர்ந்தேன். தலைமை ஆசிரியை பாலாமணியின் நெருங்கிய உறவினரான அந்த மாணவன் மீது புகார் கூறவில்லை. ஆனால் மனம் வெறுத்து பள்ளி செல்வதை தவிர்த்தேன்.

இரண்டு நாட்களுக்கு பின், ஓர் ஆளை அனுப்பினார் தலைமை ஆசிரியை. வந்தவரிடம் என் மனக்குறையை தெரிவித்தேன். உடனே அந்த மாணவனை வேறு பள்ளிக்கு மாற்றியதுடன், என்னை தேடி வந்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவரது அறிவுறுத்தல்படி படித்து, சொந்தமாக தொழில் செய்கிறேன்.

அந்த தலைமை ஆசிரியையின் பரிவு, நீதிக்கு இலக்கணமாக திகழ்ந்தது. இடுக்கண் வரும்போதெல்லாம் அவரை மனதில் நிறுத்தி முன்னேறுகிறேன்.

- க.சோணையா, மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us