PUBLISHED ON : ஜூன் 05, 2015

வெயில் காலத்தில் காற்று சூடாகவும், உலர்வாகவும் இருக்கும் போது, மேலும் நீண்ட காலத்திற்கு அதிக அழுத்தம் உள்ள சீதோஷ்ண நிலை இருக்கும் போது, வெப்பக் காற்றுகள் வீசுகின்றன. வெப்பமும், அதிகமான ஈரப்பதமும் ஒன்று சேரும் போது, வெப்பநிலை மேலும் அதிகரிக்கிறது. காற்றிலுள்ள ஈரப்பதம் ஒரு போர்வையைப் போல் செயல்பட்டு வெப்பத்தை தடுத்து நிறுத்துகிறது. அதனால், வெப்பம் இன்னும் அதிகமானது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஆஸ்திரேலிய வெப்ப காற்று!
டிசம்பர்1938ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1939ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தெற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெப்பக்காற்று 438 மரணங்களை ஏற்படுத்தியது. மேலும், பல்லாயிரக் கணக்கான மக்களை கடுமையாக பாதித்தது. அங்கு மிகவும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வெப்பம் விக்டோரியாவில் ஏற்பட்டது. அங்கு வெப்பநிலை 118 டிகிரி பாரன்ஹீட் அளவை அடைந்திருக்கிறது.
