
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கரிசலாங்கண்ணி இலை - 1 கப்
கடுக்காய் தோல் - 10
பனங்கற்கண்டு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தவும்; கடுக்காயில் விதையை நீக்கி, தோலை சுத்தம் செய்யவும். இரண்டையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து, இந்த பொடியை சிறிதளவு சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி, பனங்கற்கண்டு கலக்கவும். சுவைமிக்க, 'கடுக்காய் பானம்!' தயார்; சூடாகவோ, குளிர வைத்தோ பருகலாம்.
செலவில்லாத ஆரோக்கிய பானம்; உடல் உஷ்ணத்தை குறைக்கும்; பலவீனம் மறையும்.
- எம்.ஏ.நிவேதா, திருச்சி.
தொடர்புக்கு: 97503 33265

