
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 2 கப்
பாசிப் பருப்பு - 1 கப்
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
நெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
மிளகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - இரண்டு, நீளமாக நறுக்கியது
பெருங்காயத் துாள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முந்திரி - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில், மிதமான சூட்டில், ஓட்ஸ், பாசிப் பருப்பு, இரண்டையும், தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஓட்ஸ், பாசிப் பருப்பு, இஞ்சி, பெருங்காயத்துாள், உப்பு, சேர்த்து, வேக வைக்கவும்.
ஆறியதும், பொங்கல் கலவையை மசித்து விட வேண்டும். பின், வாணலியில், நெய் ஊற்றி, சூடானதும், முந்திரி, மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் ஊற்றி, கிளறவும். சுவையான, சத்து மிகுந்த ஓட்ஸ் பொங்கல் தயார்!
- ஜெ.ஆர்.ஜான்சி, சென்னை.