sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சதுரங்க பேராதன்!

/

சதுரங்க பேராதன்!

சதுரங்க பேராதன்!

சதுரங்க பேராதன்!


PUBLISHED ON : ஆக 09, 2025

Google News

PUBLISHED ON : ஆக 09, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஸ் என்ற சதுரங்க விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் மேன்மையானது. இதை தமிழில், 'சதுரங்க பேராதன்' என்பர். இதை பெறுவது செஸ் வீரர்களின் மிகப்பெரிய கனவாக உள்ளது. எப்.ஐ.டி.இ., என்ற சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு இந்த பெருமையை வழங்குகிறது.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற, இந்த அமைப்பு சதுரங்கத்தில் வெவ்வேறு போட்டிகளுக்கு உரிய மதிப்பெண்களை அளிக்கிறது. அவற்றில் குறைந்தது 2,500 என்ற அளவை எட்டி இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் பல நாட்டு வீரர்களுடன் விளையாடி இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு சில விதிகளும் உள்ளன.

ஒருவர் கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இந்த தகுதியை இந்தியாவில், 86 பேர் பெற்று உள்ளனர். அதில் விஸ்வநாதன் ஆனந்த், பென்டாலா ஹரி கிருஷ்ணா, கொனேரு ஹம்பி, குகேஷ், பிரக்யானந்தா புகழ் பெற்றுள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த் இந்த தகுதியை முதன் முதலாக, 1988ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜி.எஸ்.எஸ்.,






      Dinamalar
      Follow us