PUBLISHED ON : ஏப் 25, 2026

உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் என் இனிய சிறுவர் மலருக்கு வணக்கம். சிறுவர்களும் பெரியவர்களும் சேர்ந்து படித்துப் பயன்பெறும் மலர். மலரின் அட்டையில் குட்டி குட்டி மலர்களின் புகைப்படங்கள் சிறுவர் மலருக்கு அழகு சேர்க்கிறது. மலரைத் திறந்தால் மலரும் நினைவுகளை பெரியவர்களுக்கு அளிக்கிறது. தொடர்கதை, சிறுகதை கதம்ப மலராய் மகிழ்விக்கிறது. மொக்க ஜோக்ஸ், புதிர்கள் மூளைக்கு வேலை கொடுக்கிறது. மழலையர் பக்கத்தில் ஓவியக்கலையையும், மம்மீஸ் ஹெல்தி கிச்சனில் சமையல் கலையையும் ஊக்கப்படுத்துகிறது. உள்ளத்தில் எழும் எண்ணங்களை வாசகர் பகுதி, வீ டூ லவ் சிறுவர்மலர், இளஸ் மனஸ் பகுதிகளில் வெளிப்படுத்துகின்றது. மேலும் சிறுவர்களின் கையெழுத்தை மேம்படுத்துகின்றது. எல்லா வகை சிறப்புகளும் பெற்ற சிறுவர்மலர் பாராட்டுக்குரியது.
இப்படிக்கு
ஆ.அருள்ஞானிகா
8ம் வகுப்பு,
பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
விருத்தாசலம்.
தொடர்புக்கு: 74022 72714
