sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

கண் போன்றது காலம்!

/

கண் போன்றது காலம்!

கண் போன்றது காலம்!

கண் போன்றது காலம்!


PUBLISHED ON : ஆக 10, 2024

Google News

PUBLISHED ON : ஆக 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில், 2013ல், 9ம் வகுப்பு படித்த போது, ஓவிய ஆசிரியராக இருந்தார் யோகாநந்தா. அடிப்படையாக தந்திருந்த பயிற்சி அடிப்படையில் வீட்டுப்பாடமாக ஓவியம் வரைந்து வர கூறியிருந்தார்.

அடுத்த வகுப்பில் வரைந்து சமர்ப்பிக்க இயலவில்லை. ஒருநாள் அவகாசம் கேட்டோம்.

அதைக் கேட்டதும், 'நாளை... பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவு ஏதாவது நடந்தால், உங்களால் எப்படி சமர்ப்பிக்க முடியும்...' என்று கேள்வி எழுப்பினார்.

சிரிப்பால் அதிர்ந்தது வகுப்பறை. அவர் கூறியதன் பொருள் அன்று சரியாக புரியவில்லை; நகைச்சுவையாக எடுத்திருந்தேன். காலப்போக்கில் பொருள் புரிந்தது. கடமையில், காலம் தவறக் கூடாது என போதித்திருந்ததை உணர்ந்தேன்.

என் வயது, 25; பெங்களூரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறேன். வகுப்பறையில் அந்த ஆசிரியர் அறிவுறுத்தியபடி, பணிகளை காலமறிந்து செயலாற்றுகிறேன். அதன் வழி மகிழ்வுடன் வாழ்கிறேன்.

- செ.அட்சயா, கோவை.






      Dinamalar
      Follow us