sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மிகைபடச் சொல்லேல்!

/

மிகைபடச் சொல்லேல்!

மிகைபடச் சொல்லேல்!

மிகைபடச் சொல்லேல்!


PUBLISHED ON : ஜூலை 12, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 12, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார், ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், 1971-ல், 10ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியராக இருந்தார் கதிர்வேல் முதலியார். அன்றைய வகுப்பில், 'நான் வசிக்கும் பகுதியில் இருந்து யாராவது வருகிறீர்களா...' என்று கேட்டார். சிலருடன் நானும் எழுந்து நின்றேன். உடனே, 'சைக்கிள் வைத்திருப்போர் மட்டும் வகுப்பு முடிந்த பின், மாலை என்னை சந்திக்கவும்...' என்றார்.

உடனிருந்த நண்பன் சைக்கிள் வைத்திருந்தான். மாலையில் ஆசிரியரைப் பார்க்க என்னையும் அழைத்தான். உற்சாகமின்றி, 'என்னிடம் சைக்கிள் இல்லையே... நீ போய் பார்...' என கூறி மறுத்து விட்டேன். என் செயலை தவறாக சித்தரித்து தமிழாசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.

மறுநாள் வகுப்பில், 'நீ ஏன் என்னைப் பார்க்க வரவில்லை...' என்று கேட்டார் தமிழாசிரியர். காரணத்தை சொல்லும் முன், பிரம்பால் அடி விழுந்தது. அழுதபடியே பதில் சொல்லமுடியாமல் வலியுடன் தண்டனையை எதிர்கொண்டேன்.

அத்துடன் அதை மறந்து விடடார். பின், பாடங்களில் சந்தேகம் கேட்கும்போதெல்லாம் கோபமின்றி தெளிவு ஏற்படுத்துவார் தமிழாசிரியர். என் திறமையை மெச்சி மதிப்பெண் வழங்குவார். அடுத்த வகுப்பிலும் அவரே தமிழ் கற்பித்தார். நன்றாக படித்து சிறப்பு மதிப்பெண்களுடன் முதன்மையிடம் பெற்றேன்.

எனக்கு 68 வயதாகிறது. வங்கி மற்றும் மென்பொருள் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றேன். வகுப்பில் அறம் பிறழாது செயல்பட்ட தமிழாசிரியர் கதிர்வேல் முதலியாரை போற்றுகிறேன்.



- கே.குமார், சென்னை.

தொடர்புக்கு: 90032 87396







      Dinamalar
      Follow us