sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

துயரக் கடல்!

/

துயரக் கடல்!

துயரக் கடல்!

துயரக் கடல்!


PUBLISHED ON : ஜன 18, 2025

Google News

PUBLISHED ON : ஜன 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்டம், துாக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2016ல், 10ம் வகுப்பு படித்தேன். வகுப்பில், 37 மாணவர்கள் இருந்தோம். அதில் படிப்பில் மிகவும் பின் தங்கியவனாக இருந்தேன். வறுமையில் வாடியது என் குடும்பம். உணவுக்கே வழியில்லாத நிலையில் தவித்தோம். மதிய உணவுக்காக தான் பள்ளி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே மதிய உணவு கிடைக்கும். மற்ற நாட்களில் மிகவும் சிரமப்பட்டு வந்தேன். விடுமுறை நாட்களில் வகுப்பாசிரியர் சுப்பிரமணி சிறப்பு வகுப்பு நடத்துவார்.

அப்போது, மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்வார். இதற்காகவே அவற்றில் தவறாது பங்கேற்பேன். என் நிலை அறிந்து உதவிகள் செய்தார் வகுப்பாசிரியர். அதை பயன்படுத்தி, பொது தேர்வில் தேர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து முயன்று மேல்நிலை கல்வியை நிறைவு செய்தேன்.

எனக்கு, 24 வயதாகிறது. பொது நிர்வாகத்தில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்து உள்ளேன். தமிழ் திரைப்படங்களுக்கு, கதைகள் எழுதி வருகிறேன். இயக்குனராகும் கனவுடன் முயற்சி செய்து வருகிறேன். பள்ளியில் என் தேவை அறிந்து, கடுமையான வறுமை சூழலை கடக்க உதவிய அந்த ஆசிரியருக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

- வே.முரளி, கடலுார்.






      Dinamalar
      Follow us