sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பயம் பயன்படாது!

பயம் பயன்படாது!

பயம் பயன்படாது!


PUBLISHED ON : ஜூன் 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாவட்டம், ஓடையூர் அரசு ஆரம்பப் பள்ளியில், 1961ல், 5ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியர் குமரவேல், பாடங்களை புரிந்து படிக்க அறிவுறுத்துவார். அன்று முழு ஆண்டுத் தேர்வு துவங்கியது. எழுதிக் கொண்டிருந்த போது, ஒருவன் எழுந்து, ஆசிரியர் அனுமதியுடன், தண்ணீர் குடித்தான். பின், பேனாவில் சிறிது ஊற்றினான்.

இதை கவனித்து அழைத்து விபரம் கேட்டார் ஆசிரியர். பயம் கலந்த குரலில், 'ஐயா... பேனாவில் மை ஊற்றி வர மறந்து விட்டேன். அதனால், தண்ணீர் ஊற்றி எழுதலாம் என்று தோன்றியது...' என பதிலளித்தான்.

மிகவும் மென்மையாக, 'இது தவறான அணுகு முறை. இப்படி செய்வது பலன் தராது...' என்றபடி, திகைத்து நின்றவனை அருகே அழைத்து, 'எப்போதும் பயம் கொள்ளல் ஆகாது. கீழ்படிந்து நடப்பது நல்ல பண்பு. அதற்காக, எல்லா நேரத்திலும் பயம் கொண்டால் வளர்ச்சியை தடுத்து விடும்...' என அறிவுரைத்தார்.

பின், ஒரு பேனா கொடுத்து, தேர்வு எழுத உதவினார். எழுதிய பின், திருப்பி கொடுக்க முயன்றவனிடம், 'நீயே வைத்துக் கொள்...' என கனிவு காட்டினார்.

எனக்கு, 74 வயதாகிறது; பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பயம் வளர்ச்சியை தடுத்து விடும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய நல்லாசிரியரை நினைவில் கொண்டுள்ளேன்.

- பி.லட்சுமி, திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us