PUBLISHED ON : ஜன 20, 2012

அ நிறம் | அளவு
புகையிலை தென்னமெரிக்கச் செடியாகும். இந்த இலையைக் கொண்டு புகைப்பதினால், புகைக்கும் இலை என்ற பொருளில் புகையிலை என்ற பெயர் வந்தது. புகைக்கும் அளவுக்கு சரி செய்யப்பட்ட இலைக்கு 'நிகோடியானா', என்று பெயரிட்டு அழைத்தனர்.
முதலில் அமெரிக்காவில் பயிரிடப்பட்ட இந்தச் செடி, இன்று உலகத்தின் பல பாகங்களில் பயிரிடப்படுகிறது. 1492-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தச் செடியைப் பற்றிக் குறிப்பிட்டார்.
கியூபாவில் அதைப் புகைத்தார்கள். ஒரு நாணல் தட்டைக்குள் புகையிலையைப் போட்டுப் புகைத்தனர். செவ்விந்தியர் இரண்டு முக்கியக் காரணங்களுக்காகப் புகைத்தனர்.
ஒன்று மகிழ்ச்சிக்காக, இரண்டாவது நம் நாட்டில் வெற்றிலை தாம்பூலம் எல்லா நல்ல காரியங்களிலும் நாம் உபயோகப்படுத்துவது போன்று, நல்ல காரியங்களுக்கு செவ்விந்தியர் எல்லாரும் புகைத்தனர்.
