PUBLISHED ON : ஜன 20, 2012
ரோமச் சக்கரவர்த்தி ஹட்ரியன், யூத மத குருவான ஐõஷ்வா என்பவரை அழைத்து, ''நான் கடவுளைக் காண விரும்புகிறேன். அவரை எனக்குக் காட்டுங்கள்,'' என்று கூறினார்.
''அது முடியாத ஒரு காரியம். அவரைப் பார்ப்பது கூடாது,'' என்று யூத மத குரு ஜாஷ்வா கூறினார்.
சக்கரவர்த்தி மீண்டும் மீண்டும் ரபியை அலைக்கழித்து, ''நான் அவரைப் பார்த்தே ஆக வேண்டும்,'' என வற்புறுத்தினார்.
அது ஒரு கோடைகாலமாக இருந்தது. சக்கரவர்த்தியை வெளியே கூட்டிக்கொண்டு போய், ''சரி அண்ணாந்து சூரியனைப் பாருங்கள்,'' என்றார் ரபி.
சக்கரவர்த்தி, ''தன்னால் முடியாது. அது கஷ்டமான காரியம்,'' என்றார்.
ரபி சக்கரவர்த்தியைப் திரும்பிப் பார்த்து, ''சூரியன் இறைவனால் உருவாக்கப்பட்டது. அதனுடைய தேஜஸை உம்மால் பார்க்க முடியவில்லை. அப்படியிருக்க இறைவனைக் காணுவது உம்மால் எப்படி முடியும்?'' என்றார்.
உண்மையை உணர்ந்த சக்கரவர்த்தி அமைதியானார்.
