PUBLISHED ON : செப் 21, 2018

அ நிறம் | அளவு
தொடக்கப் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். கடந்த, 20 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி. காரணம், என்னிடம் படிக்கும் மாணவர்கள் தான்! வெள்ளிக் கிழமை தோறும், நான் வகுப்பறைக்கு சென்றதும், மாணவர்கள் முதலில் கேட்பது, அன்றைய, சிறுவர்மலர் இதழ் பற்றி தான்!
தற்போது, வாரம் தோறும், ஆசிரியர்கள் சார்பாக, சிறுவர்மலர் இதழ்கள் வாங்கி கொடுத்து, மாணவர்களின் படிக்கும் ஆசையை நிறைவேற்றி வருகிறோம். அனைத்து பக்கங்களையும் ஆர்வமுடன் படிப்பர். இதனால், வாசிப்பு, ஓவியம் வரையும் திறன், பொது அறிவு போன்றவை மேம்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு இணையாக, சிறுவர்மலர் இதழும், மாணவர்களுக்கு உதவி வருகிறது. இது, அனைவரும் விரும்பும், ஒரே இதழ் என்பதில் ஐயமில்லை.
- பா.இளவரசி, கடலுார்.
